search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனாதையான முதியவருக்கு கிராமமே சொந்தம் கொண்டாடி இறுதி மரியாதை
    X

    முதியவருக்கு கிராமத்தினர் இறுதி மரியாதை செய்த காட்சி.

    அனாதையான முதியவருக்கு கிராமமே சொந்தம் கொண்டாடி இறுதி மரியாதை

    • வந்தவாசிக்கு 45 வருடங்களுக்கு முன்பு வந்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்திற்கு சுமார் 45 வருடங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து அனாதையாக ஆதரவு தேடி வந்த நபருக்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த நபர்களே சபரி முத்து என பெயர் வைத்து வீடு வீடாக தினமும் 3 வேலையும் அவருக்கு உணவு வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் நல குறைவால் இருந்த சபரி முத்துவை செங்கல்பட்டு அரசு மருத்து வமனையில் அனுமதித்து ஊர் மக்கள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் சபரிமுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார் .முதியவரின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்து கிராம மக்களிடம் ஒப்படைத்தனர்.

    அனாதையாக வந்த நபருக்கு மாம்பட்டு கிராமமே ஒன்றிணைந்து ஊர்வ லமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

    அனாதையாக வந்த சபரிமுத்துக்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு பெண்கள் கண்ணீர் சிந்தியும் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×