என் மலர்
உள்ளூர் செய்திகள்

டிராக்டர் டிரைவர் பலி
- தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
- போலீசார் விசாரணை
ஆரணி,
ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). டிராக்டர் டிரைவர் இவர் அதே கிராமத்தை சேர்ந்த நாராயணன் என்பவரின் நிலத்தில் நெல் பயிரிடுவதற்காக டிராக்டரில் கண்ணன் ஏர் ஓட்டினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி கொண்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து கண்ணனின் சகோதரி ஜெயந்தி ஆரணி தாலுக்கா போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






