என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாம்பு கடித்து முதியவர் பலி
    X

    பாம்பு கடித்து முதியவர் பலி

    • விவசாய நிலத்திற்கு சென்ற போது விபரீதம்.
    • போலீசார் விசாரணை.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம் பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், (வயது 65). இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் சேத்துப்பட்டு பழம்பேட்டை, பகுதியில் உள்ளது.

    இவர் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வரப்பில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விஷ பாம்பு ஒன்று இவரை கடித்தது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனே இவரை மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு ஜெயராமனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை அடுத்துஜெயராமன், மகன் ரமேஷ், சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ் ஜெயக்குமார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×