என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக வெள்ளி கொலுசுகளை திருடிய வடமாநில வாலிபர்கள்
    X

    நகைகளுக்கு பாலீஷ் போடுவதாக வெள்ளி கொலுசுகளை திருடிய வடமாநில வாலிபர்கள்

    • 4 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடி அண்ணாமலை வேடியப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மனைவி அலமேலு (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    நேற்று முன்தினம் மதியம் கணவன், மனைவி இருவரும் வீட் டில் இருந்த போது வீட்டிற்கு வந்த வட மாநிலத்தவர்கள் 4 பேர் குறைந்த விலையில் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.

    இதனை நம்பி அலமேலு வீட்டில் இருந்த 3 வெள்ளி கொலு சுகளை பாலீஷ் போட கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் அவர்களில் ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுக்க அலமேலு வீட்டிற்குள் சென்றார்.

    பின்னர் அவர் வெளியே வந்து பார்த்தபோது 4 பேரும் வெள்ளி கொலுசு களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதை யடுத்து அவர் தனது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தப்பியோடிய 4 பேரையும் பிடித்து திருவண்ணா மலை தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ்குமார் (23), கோனுகுமார் (21), அமீத்குமார் (20), நீரஜ்குமார் (25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த வெள்ளி கொலுசுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×