என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் மாமன்
    X

    கோப்புப்படம்

    செய்யாறு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தாய் மாமன்

    • வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள சுண்டி பாக்கம் கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    இவரது அக்காவின் மகள் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். தனது அக்காள் மகளை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிறுமியை வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சிறுமிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செய்யாறு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    மெக்கானிக் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×