என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீப்பிடித்து எரிந்த மினி வேன்.
மினி வேன் தீப்பிடித்து எரிந்து நாசம்
- வைக்கோல் ஏற்றி சென்றபோது மின் கம்பி உரசியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சபரி (வயது 36).
இவர் திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் நெல் அறுவடை செய்துள்ள விவசாயிகளிடம் வைக்கோலை விலைக்கு வாங்கிக்கொண்டு மினி வேனில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தார்.
அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி சென்றதாக தெரிகிறது. வேன் புறப்பட்டு சென்ற சிறிது தூரத்தில் மின் ஒயரில் வைக்கோல் உரசியுள்ளது.
அதனால் மின்க சிவு ஏற்பட்டு வைக்கோல் தீப்பற்றி மினிவேன் எரியத்தொடங் கியது.
உடனடியாக ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால கிருஷ்ணன் தலைமையில் படை வீரர்கள் சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் வைக்கோல் முழுவதும் எரிந்ததோடு வேனும் சேதமானது.
இது சம்பந்தமாக களம்பூர் போலீசில் சபரி புகார் அளித்தார். அதன்பேரில் களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.






