search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானைகள் வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது
    X

    யானைகள் வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது

    • காப்புக்காடுகளில் வனத்துறை, மின்வாரிய அலுவலர்கள் ஆய்வு
    • மின் கம்பிகளின் உயரத்தை உயர்த்த நடவடிக்கை

    செங்கம்:

    செங்கம் அருகே நீப்பத்துறை மற்றும் பரமனந்தல் பகுதிகளில் உள்ள காப்புக்காட்டில் யானைகள் வழித்தடம் என்று கண்ட றியப்பட்டுள்ள இடங்களில் மின் கம்பிகளின் உயரத்தை கூடு தலாகமேலே உயர்த்தி அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்றது.

    இதில் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கரன், உதவிசெயற் பொறியாளர் இளங்கோவன், வனச்சரகர் ராமநாதன் உள்பட வனத்துறை மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

    மின் கம்பிகள் தாழ்வாக செல்லும் இடங்களை கண்காணித்து அந்தந்த பகுதிகளில் உயரமான மின் கம்பங்களை அமைத்து மின் கம்பிகளின் உயரத்தை அதிகரிக்க இந்த ஆய்வு நடைபெற்றதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×