search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி
    X

    மரத்தில் மோதி நின்ற லாரியை படத்தில் காணலாம்.

    மரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

    • பொக்லைன் எந்திரம் மூலம் லாரி அகற்றப்பட்டது.
    • போலீசார் விசாரணை.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பிருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது25) இவர் நேற்று லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு வேலூருக்கு சென்றுவிட்டு இரவு 10 மணி அளவில் வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    வந்தவாசி அடுத்த செங்கம் பூண்டி கிராமம் அருகே வரும்போது லாரி நிலை தடுமாறி ஓடியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள ஆலமரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் லாரி டிரைவர் ஜனார்த்தனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×