search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேனில் இருந்து தவறி விழுந்து சமையல் மாஸ்டர் பலி
    X

    வேனில் இருந்து தவறி விழுந்து சமையல் மாஸ்டர் பலி

    • ராணிப்பேட்டையை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா குருமுடி தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 63), சமையல் மாஸ்டர். இவரது மனைவி அல்லி. இவர்களுக்கு மகள்கள் உள்ளனர்.

    சுந்தரமூர்த்தி 10 பேருடன் மினி வேனில் திருவண்ணாமலையில் சமையல் வேலைக்கு சென்றார். வேலை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் வேனில் வீடு திரும்பினர்.

    கஸ்தம்பாடி அருகே வரும் போது வேகத்தடையில் வேன் ஏறி இறங்கிய போது வேனில் இருந்து சுந்தரமூர்த்தி தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    உடனே அவரை சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த களம்பூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×