என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
    X

    கார் தீப்பிடித்து எரிந்த காட்சி.

    நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அருகே உள்ள செய்யாற்றை வென்றான் கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் வயது 52 இவரது மனைவி ஆரவல்லி இவர்கள் குடும்ப த்துடன் சென்னை தண்டா ரப்பேட்டையில் வசித்து வருகின்றனர்.

    நேற்று சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு வருவதற்காக தனது மனைவியுடன் காரில் சுமார் 8.30 மணி அளவில் செய்யாறு பஸ் நிலையம் எதிரில் ஆற்காடு சாலையில் வந்து கொண்டி ருந்தார்.

    அப்போது காரில் இருந்து காஸ் கசிந்து வாசனை யுடன் சத்தம் வரவே உடனடியாக காரில் இருந்த ஞானசேகரன் மனைவியுடன் இறங்கி விட்டார்.

    சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. சாலை ஓரத்தில் இருந்து பக்கோடா கடை, பூக்கடை வைத்திருப்ப வர்கள் மற்றும் பொதுமக்கள் அலறடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு அலுவலர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர் இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக காட்சி அளித்தது. தீ விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் நிலையம் என்பதால் பரபரப்பாக காணப்பட்டது.

    செய்யாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சங்கர், ஜெயச்சந்திரன் தீ விபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை செய்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    Next Story
    ×