search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்
    X

    மின்சாரம் தாக்கி வாலிபர் படுகாயம்

    • மின் இணைப்பை பழுது பார்த்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தேவராஜ் (வயது 35) டிராக்டர் டிரைவர். இவர் நேற்று மின்கம்பத்தில் ஏறி வீட்டிற்கு மின் இணைப்பை பழுது பார்த்தார்.

    அப்போது மின்சாரம் தாக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இடது கை செயலிழந்த நிலையில் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போளூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்.

    Next Story
    ×