என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்த காட்சி.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மேற்பார்வையில், செங்கம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மலர் தலை மையில், இன்ஸ்பெக்டர் தண்டராம்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
ராயன்டபுரம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் அவரது வீட்டின் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து சுமார் 100 கிராம் கஞ்சா, பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






