என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடைகள், பார்கள் 6 நாட்கள் மூட உத்தரவு
    X

    திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடைகள், பார்கள் 6 நாட்கள் மூட உத்தரவு

    • கலெக்டர் தகவல்
    • தீபத் திருவிழாவை முன்னிட்டு நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச லேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இவ்விழாவை முன்னிட்டு திருவண்ணா மலை நகர பகுதிக்கு அருகில் செங் கம் சாலை, காமராஜர் சிலை அருகில், வேங்கிக்கால் ஏரிக் கரை, வேங்கிக்கால் புறவழிச்சாலை பைபாஸ், நல்லவன் பாளையம் ஆகிய பகுதியில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடைகள், திருவண்ணாமலை நகரத்தின் உள்பகுதியில் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் வேங்கிக்காலில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகிய உரிமம் பெற்ற மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 7-ந் தேதி (புதன்கிழமை) வரை 6 நாட்களுக்கு மதுவிற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×