என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ் பண்பாட்டு பரப்புரை
- உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது
- ஏராளமானோர் பங்கேற்று பேசினர்
வந்தவாசி:
தமிழக அரசின் மாபெரும் தமிழ்க் கனவு அமைப்பு சார்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா தலைமை வகித்தார். கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம், செயலர் எம்.ரமணன், முதல்வர் எஸ்.ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கம் முதல் தற்காலம் வரை என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கலையும் அரசியலும் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராஜு முருகன் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில் வந்தவாசி பகுதியில் உள்ள கலை அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கல்லூரி தமிழ்த்துறை தலைவர் எம்.ஞானமலர் நன்றி தெரிவித்தார்.
Next Story






