என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்
    X

    மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

    • போலீஸ் நிலையத்தில் சரண்
    • நடத்தையில் சந்தேகப்பட்டு ஆத்திரம்

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட் டம் போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு சவாரி செல்வது வழக்கம். இவரது மனைவி பச்சையம்மாள் (30). இவர்க ளுக்கு திருமணமாகி 12 வரு டம் ஆகிறது. 6-ம் வகுப்பு படிக்கும் திவ்யா (II) என்ற மகளும், நான்காம் வகுப்பு படிக்கும் கதிர்வேலு (9) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் பச்சையம் மாள் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கணவனிடம் சண்டைபோட் டுவிட்டு பச்சையம்மாள் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.

    நேற்று காலை 10 மணி அள வில் கொரால்பாக்கம் கிரா மத்திற்கு சுரேஷ் சென்று கள்ளக்காதல் குறித்து பச்சையம்மாளிடம் கேட்டுள்ளார்.

    அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி பச்சையம்மாள் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அதைத்தொடர்ந்து சுரேஷ் போளூர் போலீஸ் நிலையத் துக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிர காஷ் முன்னிலையில் சரண டைந்தார். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில், போலீசார் சென்று பச்சையம்மாள் உடலை கைப்பற்றி திரு வண்ணாமலை அரசு ஆஸ் பத்திரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×