என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் திடீர் போராட்டம்
- கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை செங்கம் சாலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
அவர்கள் தினமும் கல்லூரிக்கு அரசு பஸ் மூலம் திருவண்ணா மலைக்கு வருகின்றனர்.
மேலும் பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லாத காரணத்தால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருவதாக மாணவ, மாணவிகள் கூறினர்.
மேலும் அவ்வழியாக செல்லும் அரசு பஸ்கள் கல்லூரி அருகில் நிறுத்தாமல் செல்வதால் மிகவும் சிரமம் அடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் இன்று காலை திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் அரசு பஸ்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இச் சம்பவம் குறித்து அறிந்த திருவண்ணா மலை கிழக்கு நிலைய போலீசார் மாணவர்க ளை சமரசம் செய்தனர்.
மேலும் தேவையான போக்குவரத்து வசதி செய்து தர போக்குவரத்து துறை அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.






