என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கல்வி பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு கருத்தரங்கு
    X

    பெண் கல்வி பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு கருத்தரங்கு

    • கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் "பெண் கல்வியும் பாதுகாப்பும்" என்ற தலைப்பில் மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை ஜான்சிராணி தலைமை தாங்கினார்.

    ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர் டி.கே.ஜி‌.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக, தெள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல் ராஜ் கலந்துகொண்டு அவர் கூறும் போது:-

    மாணவிகள் ஒழுக்கத்துடன் கல்வி கற்க வேண்டும் எனவும், வெளி இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளை கவனமுடன் கையாள வேண்டும் என்று பேசினார்.

    கலாம் பவுண்டேஷன் நிர்வாகி கேசவராஜ், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் சதானந்தன் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மேலும் மாணவிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக இசையாசிரியர் சமூக விழிப்புணர்வு பாடல்களை பாடினார். பின்னர் பல்வேறு போட்டிகள் நடைபெற்று மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இறுதியில் பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×