என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மளிகை கடையில் குட்கா பறிமுதல்
    X

    மளிகை கடையில் குட்கா பறிமுதல்

    • 15 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    புதுப்பாளையம்:

    புதுப்பாளையம் அடுத்த புதுப்பாளையம் முதல் திருவண்ணாமலை செல்லும் வழியான காஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா மற்றும் புகையிலை விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போளூர் டி.எஸ்.பி குமார் மேற்பார்வையில் கடலாடி போலீசார் சென்று கடையில் சோதனை செய்தனர். அங்கு சுமார் 15 கிலோ குட்கா மற்றும் புகையிலை இருந்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதனைத் தொடர்ந்து மற்ற பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×