என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முருங்கை மரக்கன்று உற்பத்தி பண்ணைகள் அமைக்க வேண்டும்
    X

    முருங்கை மரக்கன்று உற்பத்தி பண்ணைகள் அமைக்க வேண்டும்

    • மேற்கு ஆரணி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி அனைவரையும் வரவேற்றார். துணை சேர்மன் வேலாயுதம் முன்னிலை வகித்தார் ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்கினர்.

    இதில் ஆகாரம் காமக்கூர் முருகமங்கலம் புதுப்பாளையம் மற்றும் 9 ஊராட்சிகளில் முருங்கை மரக்கன்று உற்பத்தி பண்ணைகள் அமைப்பது உள்ளிட்ட 23 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்ற ப்பட்டன.

    மேலும் வேளாண்மை துறை தோட்டக் கலைத்துறை சுகாதா ரத்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகளில் செயல்ப டுத்தப்பட்டு வரும் பணிகள் சிறப்பு திட்டங்கள் குறித்து கவுன்சிலரின் கேள்விக்கு அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும் சுகாதார துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் பகுத்தறிவு மாமது, கீதா மோகன், ஏழுமலை, மற்றும் வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் சவிதா துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×