search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவி கிணற்றில் பிணமாக மீட்பு
    X

    பள்ளி மாணவி கிணற்றில் பிணமாக மீட்பு

    • வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 14 வயதுடைய மகள் அதே பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவி கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

    எங்கு தேடியும் கிடைக்காததால் மாணவியின் தாயார் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாணவியின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் விசாரணையில் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாயமான மாணவி என்பது தெரிய வந்தது. மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×