என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசி கீழ்கொடுங்காலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    வந்தவாசி கீழ்கொடுங்காலூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • 42 வீடுகள், 18 கடைகள் இடிப்பு
    • நிழற்குடை இடிக்கப்பட்டதால் ெபாது மக்கள் அவதி

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது.

    இந்த ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடு, கடைகள் உள்ளிட்டவை கட்டி கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு, கடைகள் உள்ளிட்டவற்றில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான அறிவிப்பை வெளிவெளியிட்டது.

    இந்த நிலையில் 4 பொக்லைன் எந்திரங்கள் மூலம் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று காலை தொடங்கியது.

    வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான கீழ்க்கொடுங்காலூர் போலீசார் பாதுகாப்புடன், வந்தவாசி தாசில்தார் முருகானந்தம் தலைமையிலான வருவாய்த்துறையினர்,

    இளநிலை பொறியாளர் ரமேஷ் தலைமையிலான வந்தவாசி பொதுப்பணித்து றையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 42 வீடுகள், 18 கடைகள், ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.

    Next Story
    ×