search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்ரமிப்பு அகற்றம்
    X

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆக்ரமிப்பு அகற்றும் பணியை கலெக்டர் முருகேஷ் எஸ் பி கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்ரமிப்பு அகற்றம்

    • கலெக்டர், எஸ்.பி. நேரில் ஆய்வு
    • 7 குழு அமைத்து நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொட்டகைகள், நடைபாதை கடைகள், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்கள் பயன்படுத்த இயலாத நிலையினை ஏற்படுத்தியிருப்பது, கடைகளுக்கு முன்பாக இருக்கைகள் போடுதல், நடைபாதையினை நிரந்தர வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தல் போன்ற ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களே தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும் என கால அவகாசம் கொடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவு விட்டு இருந்தார்.

    கிரிவலப்பாதை

    இதனை தொடர்ந்து அகற்றாத ஆக்கிரமிப்புகளை ஒட்டுமொத்தமாக நேற்று அகற்ற வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டது.

    இக்குழுக்களில் தாசில்தார்கள், பொறியியல் பிரிவு நில அளவையர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவலர்கள், ஆய்வாளர்கள், வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி சாலை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கிராம பணியாளர்கள் செயலாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஆக்கிரமிப்பு அகற்றம்

    இந்த 7 குழுக்களும் இணைந்து அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தினை சுற்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள், கிரிவலப்பாதையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

    கலெக்டர் ஆய்வு

    அரசுக்கு செந்மான இடங்களில் ஆக்கிரமைப்புகள் உள்ளனவா, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர்களை நேரில் சந்தித்து கடையின் முகப்பில் மேற்கூரைகள் கூடுதலாக அமைக்ககூடாது, குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்ட வேண்டும்.

    மேலும் மின்விளக்கு கம்பங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதமும் கிரிவலப்பாதையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் ஏதேனும் ஆக்கிரமைப்புகள் உள்ளனவா என கண்காணிக்கப்படும் என கலெக்டர் முருகேஷ், தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போதே கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணியும் நடைபெற்றது.

    இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன், திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் முருகேசன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறயாளர் ரகுராமன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×