search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல்
    X

    ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து கொள்முதல்

    • கலெக்டர் தகவல்
    • 3,360 டன் கொள்முதல் செய்ய இலக்கு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் போளூர் ஆகிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் வருகிற மே மாதம் 29-ந்தேதி வரை ராபி 2022-23-ம் ஆண்டிற்கு பருவத்திற்கு உளுந்து கொள் முதல் செய்யப்பட உள்ளது.

    மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் ராபி பருவ காலத்தில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து ஒரு கிலோ ரூ.66- க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

    ஒரு ஏக்கருக்கு 370 கிலோ மட்டுமே ஒரு விவசாயிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 3,360 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத் தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உளுந்து விற்பனைக்கு எடுத்து வரும் பொழுது ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முன்பக்கம், சிட்டா, அடங் கல் ஆகியவற்றின் நகலுடன் திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு, போளூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம். இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×