search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனியம்பாடி பகுதியில் வருகிற 22-ந்தேதி மின் வெட்டு
    X

    கனியம்பாடி பகுதியில் வருகிற 22-ந்தேதி மின் வெட்டு

    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு மற்றும் கணியம்பாடி அருகே உள்ள சாத்துமதுரை ஆகிய 2 துணை மின் நிலையங்களில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை சாத்துமதுரை, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், மூஞ்சூர்பட்டு, நெல்வாய், கனியம்பாடி குளவிமேடு, சாத்துப்பாளையம் மற்றும் உள்பட அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    மேலும் சாம்கோ, வல்லம், காட்டுக்காநல்லூர், ரெட்டிபாளையம் கீழ்பள்ளிப்பட்டு, கொங்க ராம்பட்டு, மோத்தக்கல், மோட்டுப்பாளையம், வரகூர், புதூர், கீழ்அரசம்பட்டு உள்பட அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×