என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண் மீது மண்ணெண்ெணய் ஊற்றி தீ வைப்பு
- பண்ணை தோட்டத்திற்குள் மாடு புகுந்ததால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அருகில் உள்ள உண்மையாள்புரம் கிராமத்தில் பண்ணை உள்ளது. இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன் இவரது மனைவி அஞ்சலி ஆகியோர் பண்ணையை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர்.
தோட்டத்திற்கு அருகில் காமாட்சி என்பவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இவரது மாடு பண்ணை தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட அஞ்சலி மாட்டை துரத்தியதாக தெரிகிறது.
இதனை கண்ட காமாட்சி ஏன் என் மாட்டை துரத்துகிறாய் என்று அஞ்சலி இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த காமாட்சி கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை அஞ்சலி மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் அஞ்சலி தீக்காயம் அடைந்து சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து காமாட்சியை தேடி வருகின்றனர்.






