search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்த போலீசார்
    X

    கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்தபடம்.

    ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்த போலீசார்

    • வாகன ஒட்டிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு வாழ்த்து
    • விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையில் நடைபெற்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை தேரடி வீதியில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரத்தை வழங்கினார். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    முதலில் ஹெல்மெட் அணிந்த படி வந்த நபர்களுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கும், காரில் சீட் பெல்ட் அணிந்து வந்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் காரில் டிரைவர் மட்டுமின்றி அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். இது குறித்து காவல் துறை சார்பில் மாவட்ட முழுவதும் தொடர்ந்து 10 முதல் 15 நாட்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

    பின்னர் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்க ளுக்கு அபராதம் விதிக்கப்படும். அதற்கும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வில்லை என்றால் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஹெல்மெட்டை தொடர்ந்து மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதை தடுப்பது போன்றவை குறித்து படி, படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்படும். தேவையான இடங்களில் பேரிகார்டுகள், ஒளி எதிரொலிப்பான், சிக்னல் போன்றவை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அந்த பகுதியில் காந்தி சிலை அருகில் நடைபெற்ற கிராமிய கலைஞர்கள் மூலம் பல்வேறு வேடங்கள் அணிந்து நடைபெற்ற விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், தயாளன் உள்பட போலீசார் உடனிருந்தனர்.


    Next Story
    ×