என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பன்றிகள்
    X

    குடியிருப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பன்றிகள்

    • ேநாய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதி
    • துர்நாற்றம் வீசுவதாக புகார்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகள் உள்ளன.

    இதில் 18-வது வார்டு பாரதியார் தெரு என்.எஸ் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக பன்றிகள் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

    மேலும் அப்பகுதியில் இறந்த பன்றிகளை நாய்கள் கடித்து குதறியதால் துர்நாற்றம் வீசுகின்றன.

    இது சம்பந்தமாக ஆரணி நகராட்சி நிர்வாகத்திற்கு இறந்த பன்றிகளை அகற்ற புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளன.

    இந்த பகுதியில் திடீரென 10-க்கும் மேற்பட்ட பன்றிகள் தொடர்ந்து மர்மமான முறையில் இறந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    Next Story
    ×