என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் இறந்த மூதாட்டி பிணத்துடன் மறியல்
- நிவாரண உதவி வழங்க வலியுறுத்தல்
- போலீசார் பேச்சுவார்த்ைத
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த கேட்டவரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சாந்தி (வயது 58). இவர் நேற்று வீட்டில் இருந்து ஆதமங்கலம் புதூர் செல்லும் சாலையில் நடந்து சென்றார்.
அப்போது பின்புறமாக வந்த மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்து மோதியதில் சாந்தி படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கடலாடி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்த போது திடீரென சாந்தியின் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபத்தில் இறந்த சாந்தி குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என உறவினர்கள் கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து இறந்த வருக்கு நிவாரணம் உதவி வழங்க முடியாது. இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.