search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வந்தவாசியில் 2 உயர் கோபுர மின் விளக்கு
    X

    வந்தவாசியில் 2 உயர் கோபுர மின் விளக்கு

    • ரூ.14 லட்சத்தில் அமைக்கப்பட்டது
    • திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வந்தவாசி:

    வந்தவாசி 5 கண் பாலம் மற்றும் புதிய பஸ் நிலையம் செல்லும் சந்திப்பில் உயர் மின் கோபுரம் பல ஆண்டுகளாக இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 2 உயர் மின் விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு புதியதாக அமைக்கப்பட்ட 2 உயர் மின் விளக்குகளை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் பாமக மாவட்ட செயலாளர் கணேஷ் குமார்,மச்சேந்திரன், வரதன், சக்திவேல் ராமஜெயம் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×