search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு
    X

    தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு செய்த போது எடுத்தபடம். அருகில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளார்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு

    • தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்
    • 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இதன் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதலாக 40 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனை தொடர்ந்து தீபத் திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் சாமி சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் கோவில் வளா கத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    திருவண்ணாமலையில் நடைபெறும் கிரிவலத்தை போலீஸ் டி.ஐ.ஜி. சத்ய பிரியா ஆய்வு செய்து விட்டு வந்தவாசியில் உள்ள சத்புத்திரி நாயகி சமேத ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் கோலுக்கு வந்தார்.

    அன்னாபிஷேகத்தை முன்னிட்டு டி.ஐ.ஜி. சத்ய பிரியா (பொறுப்பு) சாமி தரிசனம் செய்து கோவிலை சுற்றி வலம் வந்து நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை தீபத்திற்கு கடந்த முறை 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மகா தீபத்திற்கு சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×