என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கிரிவலபாதையில் அதிகளவில் கழிவறை அமைக்க வேண்டும்
    X

    பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்த காட்சி.

    திருவண்ணாமலை கிரிவலபாதையில் அதிகளவில் கழிவறை அமைக்க வேண்டும்

    • செங்கம் பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    செங்கம்:

    செங்கம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், தரவு மேலாண்மை பிரிவு ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த செயற்குழு கூட்டத்தில் திருவண்ணா மலை கிரிவல பாதையில் கழிவறைகள் அதிக அளவில் அமைக்க வேண்டும், ஏற்கனவே உள்ள கழிவறைகளை அவ்வப்போது சுகாதாரமான முறையில் சுத்தப்படுத்த வேண்டும் எனவும், மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வாங்கிக் கொண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் கூடுதல் மருத்துவ நிபுணர்களை நியமித்து உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ரேணுகா, கிருஷ்ணமூர்த்தி, குமரன், மாவட்ட துணை தலைவர்கள் ஜெயராமன், சேகர், வழக்கறிஞர் பிரிவு ஜெயச்சந்திரன், சுந்தர்ராஜன், கவுன்சிலர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், நகர பொருளாளர் ராஜேந்திரன், இளைஞர் அணி ரமேஷ், பழனிவேல்ராஜன், பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் பாக்யராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வின் முடிவில் செங்கம் நகர தலைவர் சரவணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×