என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த பெண் குழந்தைக்கு நவீன சிகிச்சை
- ரத்த குழாய் கண்டறிந்து உடலில் ஊசி மூலம் டியூப் பொருத்தினர்
- 24 மணி நேரமும் மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு
திருவண்ணாமலை :
தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்.இவரது மனைவி முனி.இவருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்தில் பிறந்த அந்த குழந்தை ஒரு கிலோ எடை மட்டுமே இருந்தது. வழக்கமாக 36- ல் இருந்து 40 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தை குறைந்தது 3 கிலோ எடை இருக்கும்.
எடை குறைவாக பிறந்த குழந்தை ஆனால் இந்த குழந்தை 29 வாரத்தில் பிறந்ததால் உடற்பாகங்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் ஒரு கிலோ எடை மட்டுமே இருந்துள்ளது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறைமாதத்தில் பிறந்த குழந்தை மிகவும் எடை குறைவாக இருப்பதால் அதற்குரிய நோய் எதிர்ப்பு சக்தி உடல் உறுப்புகள் வளர்ச்சி குறைந்து நோய்த்தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிறப்பு டாக்டர் பெருமாள் பிள்ளை மற்றும் மயக்கவியல் மருத்துவ இணை பேராசிரியர் சரவணகுமார், டாக்டர்கள் பாபு, சீனிவாசன், பிரகாஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து சிகிச்சை தொடங்கினர்.
நவீன சிகிச்சை முதல் கட்டமாக குழந்தையின் இதயத்துக்கு செல்லும் பெரிய ரத்தக்குழாயில் டியூப் பொருத்தினால் தான் சிகிச்சையை தொடங்க முடியும் என்பதால் அதற்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் ரத்த க்குழாயை கண்டறிந்து குழந்தையின் உடலில் ஊசி மூலம் டியூப் பொருத்தும் பணி வெற்றிகரமாக செலுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இத்தகைய குழந்தைக்கு அதிநவீன வசதி கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை மற்றும் அதி நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.
இத்தகைய சிகிச்சையை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். தொடர்ந்து இந்த குழந்தை 24 மணி நேர மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் உள்ளது. குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் குழுவினர் கூறுகையில்,
பொதுவாக குறைந்த மாத எடை கொண்ட குழந்தைகளை குணமாக்குவது சவாலான செயல். நமது மருத்துவமனையில் குறைமாத குழந்தை பராமரிப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க டியூப் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தேசிய அளவில் இது போன்ற நிகழ்வு நடந்ததாக சான்று இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டுள்ளது.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை மருத்துவ கல்லூரி டீன் திருமாள் பாபு, கண்காணிப்பாளர் ஷகீல், உதவி கண்காணிப்பாளர் ஸ்ரீதர், குடியிருப்பு மருத்துவ அலுவலர் அரவிந்த் ஆகியோர் பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்