search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாசி மக உற்சவ திருவிழா
    X

    மாசி மக உற்சவ திருவிழா

    • வேதபுரீஸ்வரர் பல்லக்கில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
    • ஏராளமானோர் சாமி தரிசனம்

    செய்யாறு:

    செய்யாறு டவுன், திருவத்தூரில் அமைந்துள்ள திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான பால குஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவலில் நேற்று காலை மாசி மகத்தைெயாட்டி உற்சவமூர்த்தி களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர்கள் பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து மார்க்கெட் வழியாக ஆதி கேசவ பெருமாள் கோயில் தெரு, காந்தி சாலை, பஜார் வீதி, காஞ்சிபுரம் சாலை வழியாக புளியரம்பாக்கம், சிறிய வேலைய நல்லூர், வட எலப்பாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சுவாமிக்கு மண்டக படி பூஜைகள் பக்தர்கள் நடத்தினர்.

    பின்னர் பெருங்களத்தூரில் இரவு அப்பாவு தோப்பு குளக்கரையில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் பாலு குஜாம்பிகை வேதபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    Next Story
    ×