search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறில் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா
    X

    குருபூஜை நடந்த காட்சி.

    செய்யாறில் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா

    • ஜோதி எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார்
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு டவுன் ஆரணி கூட்டு ரோட்டில் திருவண்ணாமலை மாவட்டம் யாதவ கூட்டமைப்பு செய்யாறு தொகுதி சார்பில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 265 வது குருபூஜை விழா நடைபெற்றது.

    சிறப்பு விருந்தினராக ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அழகு முத்து கோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர செயலாளர் வழக்கறிஞர் விஸ்வநாதன், வெம்பாக்கம் ஒன்றி குழு தலைவர் ராஜி, ஒன்றிய செயலாளர் திராவிட முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு எம்எல்ஏ ஜோதிஇனிப்புகள் வழங்கியும், அன்னதானமும் வழங்கினார்.

    Next Story
    ×