என் மலர்
உள்ளூர் செய்திகள்

கச்சிகுடா - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ெரயில்
- வருகிற 26-ந் தேதி முதல் நடவடிக்கை
- வேலூர் - திருவண்ணாமலை வழியாக இயக்கப்படுகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கச்சிகுடா -நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ெரயில் வரும் 26-ம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கச்சிகுடா பகுதியில் இருந்து திருப்பதி, வேலூர், திருவண்ணா மலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர் கோவிலுக்கு வரும் 26-ம் தேதி முதல் ஜுலை 2-ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ெரயில் இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மார்க்கமும் 6 முறை இயக்கப் படவுள்ளது.
கச்சிகுடா ெரயில் நிலையத்தில் இருந்து பிரதி வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ெரயில் புறப்படவுள்ளது.
குண்டூர் (அதிகாலை 12.45 ஓங்கோல் (அதிகாலை மணி), 3.18 மணி), நெல்லூர் (காலை 5 மணி), ரேணிகுண்டா(காலை 5.40 மணி), காட்பாடி (காலை 9.20 மணி, சென்றடையும். வேலூர் (காலை 9.43 மணி), திருவண்ணாமலை (காலை 10.43 மணி). விழுப்புரம் (பகல் 12.25 மணி), விருத்தாசலம் (பிற்பகல் 1.15 மணி), ஸ்ரீரங்கம் (பிற்பகல் 2.28 மணி), திருச்சி (பிற்பகல் 3 மணி), திண்டுக்கல் (மாலை 4.40 மணி), மதுரை (மாலை 6 மணி), விருதுநகர் (மாலை 6.45 மணி), சாத்தூர் (இரவு 7.13 மணி), கோவில்பட்டி (இரவு 7.35 மணி), திருநெல்வேலி(இரவு 9.05 மணி) வழியாக நாகர்கோவில் ெரயில் நிலையத்தை சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.
இதேபோல், நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் இருந்து பிரதி வாரம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ெரயில் புறப் படவுள்ளது.
திருநெல்வேலி (அதிகாலை 2 மணி), கோவில் பட்டி (அதிகாலை 2.53 மணி), சாத்தூர்(அதிகாலை 3.13 மணி). விருதுநகர் (அதிகாலை 3.38 மணி), மதுரை (அதிகாலை 4.15 மணி), திண்டுக்கல் (காலை 5.25 மணி), திருச்சி (காலை 7.40 மணி), ஸ்ரீரங்கம் (காலை 8.23 மணி). விருத்தாசலம் (காலை 9.48 மணி).
விழுப்புரம் (காலை 10.25 மணி). திருவண்ணா மலை (காலை 11.38 மணி), வேலூர் (பிற்பகல் 1.20 மணி), காட்பாடி (பிற்பகல் 1.35 மணி), ரேணிகுண்டா (மாலை 4.25 மணி), நெல்லூர் (மாலை 6.40 மணி), ஓங்கோல் (இரவு 8.10 மணி), குண்டூர் (இரவு 10.43 மணி) வழியாக கச்சிகுடா ெரயில் நிலையத்தை திங்கள் கிழமை காலை 6.30 மணிக்கு கச்சிகுடா - நாகர்கோவில் இடையே 25 ெரயில் நிலையங் களில் வாராந்திர சிறப்பு ெரயில் நிறுத்தப்படும்.
கச்சிகுடா (ெரயில் எண் - 07435) ெரயில் நிலையத்தில் இருந்து வரும் 26-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரையும், நாகர்கோவில் (ெரயில் எண் 07436) ெரயில் நிலையத்தில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை சிறப்பு ெரயில் இயக்கப்படவுள்ளது. சிறப்பு ெரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.






