search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை- அரூர் 4 வழிச்சாலை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
    X

    4 வழி சாலை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை- அரூர் 4 வழிச்சாலை பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

    • ரூ.120 கோடியில் அமைக்கப்படுகிறது
    • தண்டராம்பட்டு, தானிப்பாடி வழியாக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் செயல்படுத்தப்படுகிறது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் இருந்து அரூர் வரை ரூ.120 கோடி மதிப்பீட்டில் 4 வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு செய்தார்.

    4 வழிச்சாலை

    திருவண்ணாமலையில் இருந்து அரூர் வரை தண்டராம்பட்டு, தானிப்பாடி வழியாக முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக ரூ.120 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பக்க கால்வாய், மேம்பாலம், நீர்வரத்து கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அமைச்சர்.எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகள் தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். ஆய்வின்போது சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×