என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல்
- பஸ்சை நிறுத்தத்தில் நிறுத்தாததால் தகராறு
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போக்குவரத்து பணிமனையில் வாழியூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி டிரைவராகவும் அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி கண்டக்டராக பணியாற்றி வருகின்றனர்.
ஆரணியிலிருந்து முனியன்குடிசை கிராமத்திற்கு செல்லும் பஸ்சில் நேற்று பணியில் இருந்தனர்.
ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் சிறுபாலம் பணி நடைபெறுவதால் பாளையஏகாம்பர நல்லூர் பொன்னியம்மன் கோவில் அருகே அரசு பஸ் நிறுத்தபட்டதாக தெரிகின்றன.
மேலும் அதே இடத்தில் தனியார் மினி பஸ் நிறுத்தபட்டுள்ளன. தனியார் பஸ் கண்டக்டர் மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகி யோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் இருவரையும் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அரசு பஸ் ஊழியர்கள் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கபட்டுள்ளனர்.
கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து ேமாகன்தாசை தேடி வருகின்றனர்.






