search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு
    X

    அரசு பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

    • மாணவியின் முகத்தில் சூடு வைத்ததால் நடவடிக்கை
    • பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொ டக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.

    இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் மகள் கவுதமி (வயது 9) 4-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இவள், சரிவர படிக்கவில்லை என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குச்சியை பற்ற வைத்து மாணவியின் முகத்தில் தலைமை ஆசிரியை உஷாராணி சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

    மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை உஷாராணி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    Next Story
    ×