என் மலர்
உள்ளூர் செய்திகள்

இலவச ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கருத்தரங்கு
- நாளை நடக்கிறது
- அரசு பணி தேர்வுகள் வெற்றி பெறுவது குறித்து விழிப்புணர்வு
போளூர்:
சென்னையில் கடந்த 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் இம்பேக்ட் ஐ.ஏ.எஸ் அகாடமி திருவண்ணாமலை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஆண்டாள் சிங்காரவேலர் திருமணம் மண்டபத்தில் உள்ள கலையரங்க வளாகத்தில் போட்டி தேர்வு குறித்து இலவச கருத்துதரங்கு நடத்த உள்ளது. இந்நிறுவன இயக்குனர்.
வெங்கடேஷ்குமார் மற்றும் இந்நிறுவனத்தின் படித்து வனத்துறை அதிகாரியாக உள்ள விஷ்ணுவர்தன் மற்றும் பல வல்லுனர்கள் கலந்து கொண்டு ஐஏஎஸ் ஐபிஎஸ் குரூப்-1, 1 குரூப்-2 போன்ற அரசு பணி தேர்வுக்கான பயிற்சி மற்றும் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
கல்லூரி படிப்பு முடித்த மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். என வெங்கடேஷ் குமார் தெரிவித்தார்.
அனைவருக்கும் அனுமதி இலவசம் மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் அகாடமியின் கையேடு வழங்கப்படும்.
மேலும் மாலை இரண்டு 2 மணி முதல் 4 மணி வரை போட்டி தேர்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை தேர்வையும் நடத்த உள்ளது.
இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் 100 சதவீதம் வரை கட்டண விலக்க அளிக்கப்படும் மேலும் அவர்கள் 98405 52455 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளளாம் எனக் கூறியுள்ளார்.






