என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
- எருமை வெட்டி அரசு பள்ளியில் வழங்கப்பட்டது
- ஓ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியம், எருமைவெட்டி அரசு நடுநிலை பள்ளியி லிருந்து அனப்பத்தூர் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்காக புதிய சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.பெருமாள் வரவேற்றார்.
ஒ.ஜோதி எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தலைமை ஆசிரியர் பெருமாள் தனது சொந்த செலவில் ரூபாய் 55 ஆயிரம் மதிப்பில் ஏற்பாடு செய்திருந்த 10 சைக்கிள்களை மாணவ மாணவிகளுக்கு எம்.எல்.ஏ. வழங்கினார்.
விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் மற்றும் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






