என் மலர்
உள்ளூர் செய்திகள்

பைக் மோதி விவசாயி பலி
- நடந்து சென்று கொண்டிருந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன் கொடநகர் நல்ல தண்ணீர் குளத் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 55) விவசாயி.
இவர் நேற்று இரவு 8 மணி அளவில் பஜார் வீதிக்கு சென்று விட்டு திரும்பவும் பைபாஸ் சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆரணி கூட்ரோட்டை நோக்கி சென்ற போது நடந்து சென்ற முருகன் மீது மோதியது. இதில் முருகனுக்கு எதிர்பாராத விதமாக தலையில் பலத்த காயம் ஏற்பட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டார் மேல் சிகிச்சகை்காக செங்கல்பட்டு அரசு மருத்து வமனை சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முருகன் மனைவி ஜீவா செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் -இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






