என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேசிய காட்சி.
எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க.வை ஒப்படைத்து விட்டு ஓ.பி.எஸ். ஒதுங்கி கொள்ள வேண்டும்
- ஆரணி பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு
- 25 சலவைத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் 51-வது ஆண்டு தொடக்க விழா பொதுகூட்டம் நடந்தது.
நகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தூசி.மோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏ.வுமான சேவூர் ராமசந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :-
1989ல் எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை வழி நடத்த ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார். ஜானகி அம்மையார் அதே போல ஓ.பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. மீது விசுவாசம் இருந்தால் ஜெயலலிதா மீது உண்மையாக பற்று இருந்தால் அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி வழி நடத்தட்டும் என்று ஓதுங்கி கொள்ள வேண்டும்.
அதிமுக கொள்கையே திமுகவை எதிர்ப்பது மட்டும் தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாவின் கொள்கையை மறந்ததற்காக தலைவர்களை ஒதுக்கிய தற்காக கருணாநிதியை எதிர்த்து தான் அதிமுக உருவானது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் 25 சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டி உள்ளிட்ட நலத்திட்டங்களை முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு, ஒன்றிய செயலாளர்கள் திருமால், ஜெயபிரகாஷ், நகரமன்ற உறுப்பினர்கள் சுதாகுமார் பாரதிராஜா சதீஷ்குமார், தேவராஜ், நகர மாணவரணி செயலாளர் குமரன் மாவட்ட ஐ.டி.விங் சரவணன், பையூர் சதிஷ், குன்னத்தூர் செந்தில், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியில் நகர மன்ற உறுப்பினர் விநாயகம் நன்றி கூறினார்.






