search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலசப்பாக்கம் தொகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம்
    X

    கலசப்பாக்கம் தொகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம்

    • சட்டமன்றத்தில் அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதில் கலசப்பாக்கம் தொகுதி ஆதமங்கலம்புதூர், கீழ்பென்னாத்தூர் தொகுதி நாயுடுமங்கலம் ஆகிய 2 கிராமங்களின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. சரவணனிடமும் தமிழக அரசின் சார்பில் ஆதமங்கலம்புதூர், நாயுடுமங்கலம் பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் நிரந்தரமாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

    அதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் நிரந்தர ஒழுங்குமுறை விற்பனை கூடம் தேவையென கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனடிப்படையில் சட்டமன்றத்தில் 4 மாவட்டங்களில் ஆறு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் அமைப்பதற்கு ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பெனத்தூர் தொகுதிக்குட்பட்ட நாயுடுமங்கலம் பகுதியிலும் கலச ப்பாக்கம் தொகுதி க்குட்பட்ட ஆதமங்கல ம்புதூரிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைய சட்டமன்றத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆதமங்கலம்புதூரிலும் நாயுடுமங்கலத்திலும் விவசாயிகளும் பொதுமக்களும் துணை சபாநாயகருக்கும் எம்எல்ஏவுக்கும் நன்றியை தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×