search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் தீ மிதித்த பக்தர்கள்
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் தீ மிதித்த பக்தர்கள்

    • ஆடிப்பூர விழா நிறைவடைந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆடி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் விநாயகர், பராசக்தி அம்மன் சாமி வீதி உலா நடைபெற்றது.

    ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நிறைவை ஒட்டி நேற்று காலை கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க சிவகங்கை தீர்த்த குளத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து சூலரூபமான அம்மனுக்கு குளத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற மங்கள வாத்தியங்கள் முழங்க தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து மாலையில் வளைகாப்பு மண்டபத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றன.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×