search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொதிக்கும் எண்ணெய்யில் வடை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    துரிஞ்சிக்குப்பம் ஆதி பராசக்தி கோவிலில் கொதிக்கும் எண்ணெய்யில் வடை எடுத்த பக்தர்கள்.

    கொதிக்கும் எண்ணெய்யில் வடை எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    • துரிஞ்சிக்குப்பம் ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

    கண்ணமங்கலம்:

    சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் ஆதி பராசக்தி கோவிலில் நேற்று ஆடிப்பூர விழா நடந்தது.

    காலையில் அம்மன் அபிஷேகம் அலங்காரம் நடந்தது. இதில் பக்தர்கள் முதுகில் அலகுகுத்தி தேர் இழுத்தனர். பின்னர் கொதிக்கும் எண்ணெய்யில் வடையும், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவில் அம்மனுக்கு திருவீதி உலாவும், நாடகம் நடந்தது. கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா அம்மனுக்கு வளையல் அலங்காரம், இரவில் தேர் உட்பிரகார உலா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஒண்ணுபுரம் சவுடேஸ்வரி கோவிலில் அம்மனுக்கு ஆடிப்பூர முன்னிட்டு வளையல் அலங்காரம் நடைபெற்றது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×