என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பூச்சி மருந்து குடித்து மின் வாரிய ஊழியர் சாவு
- குடும்ப தகராறு காரணமாக மனஉலைச்சலுக்கு ஆளானார்.
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் ரோடு தெரு வில்வசிப்பவர் மன்னார்சாமி மகன் மணிகண்டன் (வயது 30). இவர் சந்தவாசல் மின் வாரிய அலுவலகத்தில் கேங் மேன் ஆக பணி புரிந்துவருகிறார்.
குடும்ப தகராறு காரணமாக மணிகண்டன் மனஉலைச்சலுக்கு ஆளானார். கடந்த 7-ந்தேதி பயிருக்கு தெளிக்க வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி மணிண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீனா சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






