search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் கல்லை கட்டி தள்ளப்பட்ட மாடுகள் பலி
    X

    இறந்த மாடுகளை படத்தில் காணலாம்.

    கிணற்றில் கல்லை கட்டி தள்ளப்பட்ட மாடுகள் பலி

    • தீயணைப்புத் துறையினர் மாடுகளை பிணமாக மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு ஈசன் கால்வாய் ரெட்டியார் கொட்டகை பகுதியில் விவசாய நிலம் உள்ளன. இவருக்கு சொந்தமாக 2 மாடுகள் உள்ளது.

    நேற்று ஆரணி பகுதியில் கன மழை காரணமாக தனது விவசாய நிலத்திலேயே 2 மாடுகளை கட்டி விட்டு சென்றுள்ளார்.

    மேலும் இன்று காலையில் மாடுகளை கட்டி வைத்த இடத்திற்கு வந்து பார்த்தபோது 2 மாடுகள் மாயமானதால் பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை இதனையடுத்து தனது நிலத்தில் உள்ள கிணற்றை பார்த்தபோது 2 கறவை மாடுகள் இறந்து கிடப்பது தெரிய வந்தன.

    பின்னர் தகவலறிந்து வந்த ஆரணி தீயணைப்புத் துறையினர் பிணமாக கிடந்த மாடுகளை மீட்டனர்.

    இதில் இறந்து கிடந்த 2 கறவு மாடுகளின் நான்கு கால்களிலும் கயிறு கட்டி கிண்றில் தள்ளப்பட்டதை கண்டு விவசாயி மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×