search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்
    X

    டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

    • கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் நடந்தது
    • பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தரணி தலைமையில், கண்ணமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குள் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர் களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் 19 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டும் மதுவகைகளை விற்பனை செய்யவும், கடைமுன் யாரும் குடிக்க அனுமதிக்கக்கூடாது, மொத்தமாக யாருக்கும் மதுவகைகளை ஒரே நபருக்கு விற்பனை செய்வது கூடாது என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதில் அம்மாபாளையம், அழகுசேனை, விநாயகபுரம், வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×