என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து கட்டிட மேஸ்திரி சாவு
- சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40). கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர் புதுப்பேட்டை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவருக்கு லட்சுமி (28) என்ற மனைவியும், பிரியதர்ஷினி (6), மேகவர்ஷினி (2) ஆகிய மகள்களும் உள்ளனர். கடந்த 21ம்தேதி மாலை தனது வீட்டருகே இருந்த போது மோகன்ராஜை விஷப்பாம்பு கடித்தது. அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






