என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.
புதுப்பாளையம் ஊராட்சியில் கலெக்டர் ஆய்வு
- சாலை பணிகள் நடந்து வருகிறது
- மக்கும் குப்பை மக்காத குப்பையை பார்வையிட்டார்
புதுப்பாளையம்:
செங்கம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதுப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பையை பார்வையிட்டார்.
புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் உஸ்னாபீ, புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், மரியதேவானந்த், உடன் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் அன்புசெல்வன், ரஞ்சித் குமார், மகேஷ்வரிமுருகன், உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து காரப்பட்டு புதுப்பாளையம் புதிதாக போடப்படும் சாலையை கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திசீனு உடன் இருந்தார், பின்னர் முன்னூர்மங்கலம், புதூர்செங்கம், உண்ணாமலைபளைம், நாகப்பாடி, காரப்பட்டு ஆகிய ஊராட்சிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.






